ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மூளைத் திருடி

மூளைத் திருடி


மூச்சிறைக்க
ஓடிவந்த
குழந்தைச் 
சொல்லியது...


"சார்... சார்...
இவன் 
மூளையைத் திருடி
எங்கப்பா வித்து
குடிச்சுப்பிடிச்சு சார்..."


படீரென
எதிர்பாராத
அதிர் வேட்டின்
தாக்குதல் போல்
ஆடிப் போனேன்...


குழந்தை சுட்டிய
இடத்தில்
மாற்றுத்திறன்
மழலையொன்று
உதட்டைப் பிரிக்காமல்
பூ போல மலர்ந்து
நின்றிருந்தது !
                                                                         - சுகன்.

2 கருத்துகள்:

  1. குழந்தை சுட்டிய
    இடத்தில்
    மாற்றுத்திறன்
    மழலையொன்று
    உதட்டைப் பிரிக்காமல்
    பூ போல மலர்ந்து
    நின்றிருந்தது !

    sugan! uyirppana varikal.

    பதிலளிநீக்கு
  2. அதிர்வேட்டின் தாக்குத‌ல் எம‌க்குள்ளும்! அடுத்த‌ ப‌த்தியில் முடிச்ச‌விழ‌, திகைத்துப் போகிறோம். இக் குழ‌ந்தைக‌ளை குழ‌ந்தைக‌ள் தானே என‌ சாதார‌ண‌மாக‌ எடை போட்டுவிட‌ முடியாது. வெடிபோல் சில‌தை அனாய‌ச‌மாய் சொல்லிவிட்டு அல‌ட்சிய‌மாய் க‌ட‌ந்து விடுவ‌ர்.

    பதிலளிநீக்கு