ஞாயிறு, 28 நவம்பர், 2010


த.ச.தமிழனார் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர். அணி இலக்கணம் எழுதியவர். இதழ் நடத்தியதற்காக நெருக்கடிகாலத்தில் பணி நீக்கம் செய்யபட்டவர். புதுகவிதைக்கு இலக்கணம் எழுதியவர். புதுமை கருத்துகள் கொண்டவர். தமிழ்நாட்டில் உள்ள திருவாரூரில்தமிழறிஞர் திரு.வி.கவுக்கு சிலை வைத்தவர். இயற்றமிழ் பயிற்றகம் நடத்தியவர்.
-சுகன்
வ.விஜயபாஸ்கரன் இன்றும் கோவையில் வசிக்கும் எழுத்தாளர். 85 வயதை கடந்தவர். 1955மே மாதம், சரஸ்வதி இலக்கிய இதழை ஆரம்பித்தவர். மறுமலர்ச்சி இலக்கியம் படைத்த இதழ் சரஸ்வதி. 1962 சரஸ்வதி கடைசி இதழ் வந்தது. ஜெயகாந்தன், சுந்தரராமசுவாமி, டி. செல்வராஜ், நா.வானமாமலை, சாமி. சிதம்பரனார் போன்றவர்கள் இதழில் எழுதியவர்களில் சிலர்.
- சுகன்