வியாழன், 13 ஜனவரி, 2011

கோவில்கள்

மனித மனங்களின்
புலம்பல் முகாம்கள்

இளவட்டங்களின்
மன்மத மடங்கள்

வயதானவர்களின்
வம்பரங்கங்கள்

கலாச்சாரத்தின்
கல் வடுக்கள்

கடவுள்களின்
சிறைச்சாலைகள்

இங்கே
அர்ச்சனை
அலங்கார
தண்டனைகளை
அனுபவித்தபடி
தெய்வங்கள்

கோவில்கள் பல
களையிழந்து
கிடக்கிறதே
காவிரியைப்போல

கோவில் நிலங்களின்
குத்தகைக்காரர்கள்
என்ன
கர்நாடகக்காரர்களா?

ஒரு விதத்தில்
கோவில்களும்
ரசிகர் மன்றங்கள்தான்.
- சுகன்