ஞாயிறு, 20 ஜனவரி, 2013

திமிரெடுத்து
அலைபாய்கிற
விழிகளின் முன்
பிச்சைபாத்திரங்களாய்
என் விழிகள்

அவை 
ஓரிரு குறிப்புகளையாவது
என்னுள் எழுதக்கூடாதா?

ஓரமாய் மெல்லப் பதுங்கி

சிந்தி விடக்கூடாதா?
ஒரு

சின்னக் கசிவை

ஏக்கத்தை எழுதித்தள்ளும்
என் 
அப்பாவி பார்வைகளை
கவனிக்காதது போல்
கழிக்கிறாயா?
கவனத்துக்கே வரவில்லையா?

ஒரு

புரியாத புதிரைப்போல
புழங்கியாடுகிறது
உன் விழிமொழிகள்

பிரபஞ்ச இரகசியம்
புரிந்தா வாழ்கிறோம்

இயற்கையின் 
சூட்சமம் பயின்று தீருமோ?

அட...  டா...

என்ன விதமான விழிகள்
உன் விழிகள்.

                             - சுகன்