செவ்வாய், 29 மார்ச், 2011


1.

இழப்பு

தூசில் கிடக்கிறது
ரசனை...

அவகாசம் இல்லை
மொட்டை மாடியிருந்தும்
முழுநிலா ருசிக்க

ஓடிக் கொண்டிருக்கும்
அவசரத்தில்
அந்தி, சந்தி
புசிப்பது யார்?

2.

மௌனமாய் இருப்பது
முடிவெடுத்த வேளையில்
சிணுங்கியது கைப்பேசி.

3.

உதட்டுக்குப்
புன்னகை அழகு
புன்னகை கலைந்து
மௌனம் குந்தப்
பேரழகு

4.

எப்போதும்
வருவதில்லை
எதிர்பார்க்கும் கடிதம்

திடீரென வந்து நிற்பாய்
நடுநிசியில்
கடிதம் எழுதாக்
கோபம் சிதைய.
- சுகன் - நிழற்படம் - சுகன்.