சனி, 11 டிசம்பர், 2010

திராவகக்கவிஞன்


இழிவு கொண்ட
மனிதர்களை
எச்சரிக்கை
செய்யவே
எழுந்து நிற்கும்
மீசையை
முகவரியாய்
வைத்திருந்தான்
முண்டாசுக்கவிஞன்


பல
நூற்றாண்டுகள்
இருண்டுகிடந்த
தமிழ்க்கவிதை
உலகிற்கு
நவீன வெளிச்சம்
பாய்ச்சிய
மின்சாரக்கவிஞன்


தமிழ் எழுத்துகளை
பாரதி
கவிதையாய்
ஒருங்கினைத்த போது
அவை
ஆயுத மொழி பேசின


தமிழ்க்கவிதைக்கு
தீவிரவாதத்தை
கற்றுக்கொடுத்த
திராவகக்கவிஞன்
பிறந்த நாள்
11 -12 -
- சுகன்