சனி, 11 டிசம்பர், 2010

திராவகக்கவிஞன்


இழிவு கொண்ட
மனிதர்களை
எச்சரிக்கை
செய்யவே
எழுந்து நிற்கும்
மீசையை
முகவரியாய்
வைத்திருந்தான்
முண்டாசுக்கவிஞன்


பல
நூற்றாண்டுகள்
இருண்டுகிடந்த
தமிழ்க்கவிதை
உலகிற்கு
நவீன வெளிச்சம்
பாய்ச்சிய
மின்சாரக்கவிஞன்


தமிழ் எழுத்துகளை
பாரதி
கவிதையாய்
ஒருங்கினைத்த போது
அவை
ஆயுத மொழி பேசின


தமிழ்க்கவிதைக்கு
தீவிரவாதத்தை
கற்றுக்கொடுத்த
திராவகக்கவிஞன்
பிறந்த நாள்
11 -12 -
- சுகன்

3 கருத்துகள்:

  1. "தமிழ்க்கவிதைக்கு
    தீவிரவாதத்தை
    கற்றுக்கொடுத்த
    திராவகக்கவிஞன்"



    அவன் தமிழ்க் கவிதைக்கு மட்டும் கற்றுத் தரவில்லை தீவிரவாதம், என் போன்ற பெண்களுக்கும் கொஞ்சம் த்ந்து விட்டுப் போனானே...!.

    பதிலளிநீக்கு
  2. கறுப்பு நிறம் எடுத்ததும் பார்க்க அழகாக உள்ளது. நன்றி...

    பதிலளிநீக்கு
  3. @ கிருஷ்ணப்ரியா
    // தீவிரவாதம், என் போன்ற பெண்களுக்கும் கொஞ்சம் தந்து விட்டுப் போனானே //
    நல்லவேளை சொன்னீங்க. நீங்க கவிஞர் மட்டும்தான்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன் :))

    பதிலளிநீக்கு