திங்கள், 5 மார்ச், 2012

மௌனத்தை 
எச்சமாக்கிவிட்டு
எரிந்து போனாய்
உரமாக்கி கொண்டதனால் - என்

உயிர் செழிக்கிறது
09-03-2012 வெள்ளி மாலை 6.30 மணி
அம்மாவீடு,
சி - 46 இரண்டாம்தெரு,
முனிசிபல்காலனி,
தஞ்சாவூர் - 613 007

அம்மா ஞா.சுசிலா நான்காமாண்டு நினைவுச் சாரல்

வரவேற்பு சு.இதழாளன்

தலைமை இலக்குமிகுமாரன்ஞானதிரவியம்

தடம் பதித்த தாய்மார்கள் - இரா.மீனாகுமாரி

தமிழ்அறிஞர்கள் பார்வையில் தாய்மை - மு.தாமரைச்செல்வன்

ஞாபகவெளியில் பறந்து - தெ.வெற்றிச்செல்வன்

                                                                                           அழைப்பில்
                                                                                                           .சுகன்

புதன், 11 ஜனவரி, 2012

தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

கோலம் அம்மா
ஞா.சுசிலா
தைம்முதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை யல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த
ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி யாண்ட தமிழருக்கு
தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
                                                                               - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


      எத்தனைப் பாரதிதாசன்கள் வந்தால் என்ன? கவிதை முழங்கினால் என்ன? தமிழரின் தூக்கம், தமிழ்ச் சமூகத்தின் துக்கமாகவே இருக்கிறது. தமிழரின் அறிவியல் மூளை விளைவித்தவைகளின் சான்றாக இன்னும் அசைக்க முடியாமல் இருக்கிற ஆதாரங்கள் கொஞ்சமே, அழிந்துப் போனவை என்பதை விட, திட்டமிட்டு திருடப்பட்டவை, திருத்தப்பட்டவை, திசைமாற்றப்பட்டவை, அழிக்கப்பட்டவை என தமிழரின் தூக்கத்தால் தூர்ந்துப்போனவை ஏராளம்.


     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே செம்மையாக அறிவியல் அணுகுமுறையோடு வாழ்ந்த ஒரு இனத்தின் இன்றைய சீரழிவும், இழிநிலையும், தரித்திரமும் வெட்கி தலைக்குனியும் படி இருக்கிறது. எனினும் நம்பிக்கை முற்றிலுமாய் சிதைந்து விடவில்லை. வெட்டுப்பட்ட இடங்களில் எல்லாம் துளிர்கள் துலங்கிக் கொண்டுதான் இருக்கும். அவற்றை வளர்த்தெடுக்க வைப்போம் சூரியப்பொங்கல்.


     தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
                                   - சுகன்.