திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பாழாப்போகட்டும்

வார்த்தைகள்
வன்முறையாய் வெட்டும்

கீச்சாதி பயலுவல்ல
நெட்டநெடிய தலைமுறையே
கூனிக் குறுகும்...

வார்த்தைகளில்
விசம் புதைந்திருக்கம்...


காலால் மூத்திரம் பெய்யிரவ
பேச வந்துட்டா...

சக பாலை இதைவிட
இழிவாய் எள்ளுதல் முடியாதுதானே?

கைலி கட்டியவர்கள்
கோயிலுக்குள் நுழையக்கூடாது

செருப்படி கொடுத்தவனையே
கண்ணப்ப நாயனாராய்
ஏத்துக் கொண்ட தெய்வம்
உள்ளே மௌனமாய்...

பட்டு வேட்டி கட்டியிருந்தாலும்
சூத்திரப் பயல்கள்
கருவறைக்குள்
நுழைய முடியாது
சாமியோவ்...
- சுகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக