புதன், 11 மே, 2011


எங்காவது ஒரு மூலையில்

முதிர்ந்த பார்வை
கிரகணம் அகற்றும் !

முழுசாய்
அழுக்கு நீக்கி முடியாது

தொலைந்து கொண்டிருக்கிற
அற்புதங்களுக்கிடையில்
அனுபவம் தேடி
மூச்சு வாங்குகிற
பித்தத்தின் நிழலில்
சிற்பமொன்று
ஒளிந்து கொண்டிருக்கிறது
பழங்காலத்
தீய்ந்த வாசனையோடு !

கடந்து கடந்து ஓடுகிற
என் நெடுவெளிப் பயணத்தில்
பூரணத்துவத்துக்கான
ஒத்திகை
அடிக்கடி நிகழ்ந்து
தோற்கும் !

எங்கோ ஒரு
பிடிபடாத மூலையில்
என்
கேள்விகளுக்கான
சுரப்பு இருக்கலாம்... .. .


கவிதை, ஓளிப்படம் - சுகன்.

3 கருத்துகள்:

  1. காட்டியதும் காட்டாததுமாய் சிந்தையை தூண்டும் கவிதையும் படமும் அழகு அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. "தொலைந்து கொண்டிருக்கிற
    அற்புதங்களுக்கிடையில்"

    அழகான அர்த்தமுள்ள வார்த்தைகள்..... எதையெதையோ தேடி, எத்தனை அற்புதங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறாம்...?

    பதிலளிநீக்கு
  3. eraaedwin .blogspot .com என்று கொடுத்து வலைப்பட்டியலில் சேருங்கள் சுகன்... w க்கு பதிலாக v போட்டிருக்கிறீர்கள். அதனால் தான் சேரவில்லை

    பதிலளிநீக்கு