சனி, 4 டிசம்பர், 2010

ஒன்றில் மற்றொன்று
உனது
உதடுகள் எழுதுகிற
வார்த்தைகளில்
நான்
வௌவாலாய்
தலைகீழாய்...

நீ
என் பக்கத்தில்
இல்லாதபோது
என் அந்தரங்கம்
அனாதையாகிறது ...

நமது
வாழ்வின்
எல்லா நிமிஷங்களும்
ரசிப்புக்குரியவை

உனக்குள் நான்
மின்சாரமாய்
எனக்குள் நீ
பிரகாசமாய் !
- சுகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக